Thursday, June 4, 2009

முன்சீப் கோர்ட் நீதிபதியாக...

கோவை மாவட்ட மூன்றாவது கூடுதல் முன்சீப் கோர்ட் நீதிபதியாக சக்ரவர்த்தி, 2009, ஜூன் 1ந் தேதி முதல் பதவிஏற்றுள்ளார். இந்தியாவிலேயே பார்வையற்ற ஒருவர், முன்சீப் கோர்ட் நீதிபதியாக பதவியேற்பது இதுவே முதல் முறை. பிறவியிலேயே கண் பார்வையில்லாத நிலையில், கேட்கும் திறன் அடிப்படையாகக் கொண்டு, தேர்வு எழுதி வெற்றிப் பெற்றுள்ளார். வக்கீலாக பணியை துவக்கிய சக்ரவர்த்தி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் நீதிபதிக்கான தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற இவர்,கடந்த இரண்டு மாதங்களாக, கோவை மற்றும் வால்பாறை முன்சீப் கோர்ட்களில் பயிற்சிப் பெற்றுள்ளார். இவர், கோர்டில் வாதி, பிரதிவாதியின் வாதங்கள், சாட்சிகள், ஆவணங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து, அத பின் கேட்புக் கருவிகளின் உதவியோடு கேட்டு, பின்பு தீர்ப்பு வழங்குவார். அவரைப் பற்றி மேலும் விவரங்களை கேட்டதற்கு, ஐகோர்ட்டில் அனுமதி பெற்ற பின் நிருபர்களை சந்தித்து, என்னைப் பற்றிய முழு விபரங்களை தெரிவிக்கிறேனென தெரிவித்துள்ளார். இவர் தனது உழைப்பால் தலைமை நீதிபதியாக உயர்வுப் பெற்று சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்.