Tuesday, March 31, 2015
Thursday, March 26, 2015
தன்னம்பிக்கையாளர்கள் -1
மாற்றுத்திறனாளிகளான இவர்கள் சாதனையாளர்களாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் தன்னம்பிக்கையாளர்கள். எமக்கு அறிமுகமாகும் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து வரும் மாற்றுத்திறனாளிகளை உங்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கிறேன். அவர்களை வாழ்த்தி ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே.
1) திரு.மனோகரன் அவர்கள் இரண்டு கால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளியாகவும் மூத்தக்குடிமகனாகவும் இவர், இருப்பினும், இந்த வயதிலும் மனைவியாரின் துணையுடன் சேலத்தில் உணவகம் நடத்தி வருகிறார்.
#காய்கறி சந்தையில் சந்தித்து உரையாடியபோது.
2) இடது கை பிறவியிலேயே செயலிழந்த திரு.இர்ஃபான், 6ம் வகுப்பு வரை படித்து விட்டு குடும்ப சூழ்நிலையால் பெட்ரோல் பங்கில் பணிபுரிகிறார்.
3) திரு.செந்தில்குமார் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. திருமணமாகி , குழந்தை செல்வங்களும் உண்டு. சேலத்தில் வெள்ளி பட்டறையில் பணிபுரிகிறார். சேலம் ஹஸ்தம்பட்டியில் சந்தித்தபோது.
4) திரு.சக்திவேல் இரண்டு கால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளி. இவருடைய மூன்று சக்கர கைமிதிவண்டியையே கடையாக அமைத்து, சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நொறுக்குத்தீனி ( Snacks ) விற்பனை செய்கிறார்.யாரொருவர் பணிபுரிய தகுதியிருந்தும் சோம்பலாய் இருந்து, யாசகமாய் உணவு உண்பவர்களை, கடுமையாக சாடும் வாசகங்களை தனது கடை வண்டியில் ஒட்டியிருக்கிறார்.
#தற்போது இவருக்கு தேவையான உதவி: வருமானத்தை அதிகரிக்கும் ''விதமாக ''டம் டீ, காபி'' விற்க 10 லிட்டர் கொள்ளளவு உடைய கேன்னை யாராவது வாங்கி கொடுத்தால், தனக்கு மிகவும் உதவியாக இருக்குமென கருதுகிறார். உதவ விரும்புபவர்கள் , எம்மை தொடர்புக் கொள்ளவும்.. நேரடியாக அவரிடமே நீங்கள் வழங்க விரும்பினாலும் வழங்கலாம்.
நேசமிகு நாளாகட்டும் நட்புகளே.
மாற்றுத்திறன் படைத்தோருக்கான திருமண விழா - 2015
சென்ற மார்ச் 8, 2015. ஞாயிறு கிழமை காலை
சேலம் தமிழ் சங்க அரங்கத்தில் சேலம் மாவட்ட உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கமும், சேலம் காஸ்மாஸ் அரிமா சங்கமும் இணைந்து '' மாற்றுத்திறன் படைத்தோருக்கான திருமண விழா'' நடைப்பெற்றது. அதில் சில கட்சிகளும், செய்திகளும்.
தலைமை உரையாற்றிய:
1) சேலம் மாவட்ட சங்க த் தலைவர் அரிமா Dr.P. அத்தி அண்ணா MJF
முன்னிலை வகித்தவர்களில் சிலர் :
2) சேலம். நரசுஸ் காபி கம்பெனி லிமிட்டெட், மேலாண்மை இயக்குனர் திரு..சிவானந்தம்,
3) சங்க நிரந்தர காப்பாளர் அரிமா Dr. Love 'O' A.K.நாகராஜன் MJF
சிறப்பு அழைப்பாளர்கள்:
4) சேலம் மாவட்ட ஆட்சி தலைவர் திரு.K.மகரபூஷணம் IAS
5) தென்னக இரயில்வே, சேலம் டிவிஷன்,
சீனியர் டிவிஷனல் கமர்சியல் மேனேஜர் திரு K,P.தாமோதரன்
மற்றும் பலர் வாழ்த்துரை வழங்க '' மாற்றுத்திறன் படைத்தோருக்கான திருமண விழா'' சிறப்பாக நடந்தேறியது..
6) விழா துவங்கும் முன் சேலம் மாவட்ட உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்க ஆலோசகரான எம்முடன், எமக்கடுத்து வீற்றிருக்கும் மாவட்ட சங்க துணைத்தலைவர் திரு R.அரவிந்தகுமார் B.A., மாவட்ட சங்க பொருளாளர் திருS.வெங்கட்ராமன் B.Sc.
7) திருமண ஜோடிகளில் ஒருவரும், எமக்கு முன்பே அறிமுகமான இரு கால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளி நண்பருமான கிராபிக் டிசைனராக பணிபுரிந்து வரும் K.செந்தில் குமார் தனது மனைவி திருமதி V.வித்யாவுடன். அவர் மனைவியும் ஒரு இரு கால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.
8) யான் தருமபுரி மாவட்ட சங்க பொதுசெயலாளராக செயலாற்றி விடுபட்டபின் திருமதி ஜானகி அவர்கள் அமரராகும் வரை பொறுப்பிலிருந்தார்கள். அவருக்குப்பின் பொறுப்பேற்ற தருமபுரி மாவட்ட உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கத் தலைவர் திரு Ln.K.A.மாணிக்கம் அவர்களும், சங்க நிர்வாகிகளுடனும்
9) கவிஞர் அரிமா திருமதி.மாலதி அனந்தபத்மநாபன், தருமபுரி அவர்களுடன். #இவரும் ஒரு மாற்றுத்திறனாளியே. மாற்றுத்திறனாளிகளின் சேவையில் ஈடுபாடு கொண்டு செயல்பட்டு வருபவர்.
10) இவ்விழாவிலே புதிதாக அறிமுகமான S.வேணுகோபால் , இரு கால்களும் செயலிழந்த ஒரு மாற்றுத்திறனாளி தான். கைப்பேசி பழுது நீக்கும் கடையில் பணியை கற்று, தன்னம்பிக்கையுடன் நாமக்கல் மாவட்டத்திலுள்ள நாமகிரிபேட்டை பேருந்து நிலையம் எதிரில் கைப்பேசி பழுது நீக்கும் கடையை தனியாக நடத்தி வருகிறார். #கைப்பேசி பழுது நீக்கும் பயிற்சியை, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக கற்றுத்தர இருக்கிறார். விருப்பமுள்ளவர்களும், வாழ்த்தவும், கைப்பேசி பழுது நீக்க தொடர்புக் கொள்ள விரும்புபவர்களும் இக்கைப்பேசியில் எண்ணில் தொடர்புக் கொள்ளவும்:
தொடர்பு எண்:98425 87269
11) இப்பெண்ணும் இவ்விழாவிலே புதிதாக அறிமுகமானவர். அறக்கட்டளை நடத்தி வருவதாக அறிந்துக் கொண்டேன். இவரின் அறிமுகம் என் வாழ்வில் எமக்கொரு பாடமாகும், பெயர் நினைவிலிருந்து அகன்று விட்டது.

12) திரு.குமார் விழா நடைபெறுவதற்கு முதல் வாரத்தில் நான் சென்ற வழியில் இவரை அறிமுகப்படுத்திக் கொண்டேன். இவரும் மீண்டும் எம்மிடம் பேச விரும்பினார். இவ்விழா ஒரு வாய்ப்பாக அமைய அவரையும் அழைத்தேன். வந்தவர், அவருக்கும் பெண் தேவையென கேட்க, மாவட்ட தலைவரை சந்திக்க ஏற்பாடு செய்து தந்தேன் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.
13) மணமக்களில் ஒரு பகுதி
14) தருமபுரி மாவட்ட சங்க செயலாளர்

15) திரு.இரா.மணி அவர்கள், அரசு பட்டுப்புழு வளர்ப்பு துறை ஆய்வாளராக பணியாற்றி ஒய்வு பெற்றவர்.
மேலும் சிலருடன் அறிமுகமும் உரையாடும் வாய்ப்பும் கிடைத்தது.
#ஆனால் தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்க மாநில பொதுசெயலாளர் திரு. ஆவின் k.கோபிநாத் BE., M.BA., MSW அவர்களை சந்திக்க ஆவலுடன் எதிர்நோக்கி, வராமையால் ஏமார்ந்தேன் நட்புகளுக்கு அன்பான நன்னாள் வாழ்த்துக்கள்.
நட்புகளுக்கு அன்பான நன்னாள் வாழ்த்துக்கள்.
சேலம் தமிழ் சங்க அரங்கத்தில் சேலம் மாவட்ட உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கமும், சேலம் காஸ்மாஸ் அரிமா சங்கமும் இணைந்து '' மாற்றுத்திறன் படைத்தோருக்கான திருமண விழா'' நடைப்பெற்றது. அதில் சில கட்சிகளும், செய்திகளும்.
தலைமை உரையாற்றிய:
1) சேலம் மாவட்ட சங்க த் தலைவர் அரிமா Dr.P. அத்தி அண்ணா MJF
முன்னிலை வகித்தவர்களில் சிலர் :
2) சேலம். நரசுஸ் காபி கம்பெனி லிமிட்டெட், மேலாண்மை இயக்குனர் திரு..சிவானந்தம்,
3) சங்க நிரந்தர காப்பாளர் அரிமா Dr. Love 'O' A.K.நாகராஜன் MJF
சிறப்பு அழைப்பாளர்கள்:
4) சேலம் மாவட்ட ஆட்சி தலைவர் திரு.K.மகரபூஷணம் IAS
5) தென்னக இரயில்வே, சேலம் டிவிஷன்,
சீனியர் டிவிஷனல் கமர்சியல் மேனேஜர் திரு K,P.தாமோதரன்
மற்றும் பலர் வாழ்த்துரை வழங்க '' மாற்றுத்திறன் படைத்தோருக்கான திருமண விழா'' சிறப்பாக நடந்தேறியது..
6) விழா துவங்கும் முன் சேலம் மாவட்ட உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்க ஆலோசகரான எம்முடன், எமக்கடுத்து வீற்றிருக்கும் மாவட்ட சங்க துணைத்தலைவர் திரு R.அரவிந்தகுமார் B.A., மாவட்ட சங்க பொருளாளர் திருS.வெங்கட்ராமன் B.Sc.
7) திருமண ஜோடிகளில் ஒருவரும், எமக்கு முன்பே அறிமுகமான இரு கால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளி நண்பருமான கிராபிக் டிசைனராக பணிபுரிந்து வரும் K.செந்தில் குமார் தனது மனைவி திருமதி V.வித்யாவுடன். அவர் மனைவியும் ஒரு இரு கால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.
8) யான் தருமபுரி மாவட்ட சங்க பொதுசெயலாளராக செயலாற்றி விடுபட்டபின் திருமதி ஜானகி அவர்கள் அமரராகும் வரை பொறுப்பிலிருந்தார்கள். அவருக்குப்பின் பொறுப்பேற்ற தருமபுரி மாவட்ட உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கத் தலைவர் திரு Ln.K.A.மாணிக்கம் அவர்களும், சங்க நிர்வாகிகளுடனும்
9) கவிஞர் அரிமா திருமதி.மாலதி அனந்தபத்மநாபன், தருமபுரி அவர்களுடன். #இவரும் ஒரு மாற்றுத்திறனாளியே. மாற்றுத்திறனாளிகளின் சேவையில் ஈடுபாடு கொண்டு செயல்பட்டு வருபவர்.
10) இவ்விழாவிலே புதிதாக அறிமுகமான S.வேணுகோபால் , இரு கால்களும் செயலிழந்த ஒரு மாற்றுத்திறனாளி தான். கைப்பேசி பழுது நீக்கும் கடையில் பணியை கற்று, தன்னம்பிக்கையுடன் நாமக்கல் மாவட்டத்திலுள்ள நாமகிரிபேட்டை பேருந்து நிலையம் எதிரில் கைப்பேசி பழுது நீக்கும் கடையை தனியாக நடத்தி வருகிறார். #கைப்பேசி பழுது நீக்கும் பயிற்சியை, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக கற்றுத்தர இருக்கிறார். விருப்பமுள்ளவர்களும், வாழ்த்தவும், கைப்பேசி பழுது நீக்க தொடர்புக் கொள்ள விரும்புபவர்களும் இக்கைப்பேசியில் எண்ணில் தொடர்புக் கொள்ளவும்:
தொடர்பு எண்:98425 87269
11) இப்பெண்ணும் இவ்விழாவிலே புதிதாக அறிமுகமானவர். அறக்கட்டளை நடத்தி வருவதாக அறிந்துக் கொண்டேன். இவரின் அறிமுகம் என் வாழ்வில் எமக்கொரு பாடமாகும், பெயர் நினைவிலிருந்து அகன்று விட்டது.

12) திரு.குமார் விழா நடைபெறுவதற்கு முதல் வாரத்தில் நான் சென்ற வழியில் இவரை அறிமுகப்படுத்திக் கொண்டேன். இவரும் மீண்டும் எம்மிடம் பேச விரும்பினார். இவ்விழா ஒரு வாய்ப்பாக அமைய அவரையும் அழைத்தேன். வந்தவர், அவருக்கும் பெண் தேவையென கேட்க, மாவட்ட தலைவரை சந்திக்க ஏற்பாடு செய்து தந்தேன் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.
13) மணமக்களில் ஒரு பகுதி
14) தருமபுரி மாவட்ட சங்க செயலாளர்

15) திரு.இரா.மணி அவர்கள், அரசு பட்டுப்புழு வளர்ப்பு துறை ஆய்வாளராக பணியாற்றி ஒய்வு பெற்றவர்.
மேலும் சிலருடன் அறிமுகமும் உரையாடும் வாய்ப்பும் கிடைத்தது.
#ஆனால் தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்க மாநில பொதுசெயலாளர் திரு. ஆவின் k.கோபிநாத் BE., M.BA., MSW அவர்களை சந்திக்க ஆவலுடன் எதிர்நோக்கி, வராமையால் ஏமார்ந்தேன் நட்புகளுக்கு அன்பான நன்னாள் வாழ்த்துக்கள்.
நட்புகளுக்கு அன்பான நன்னாள் வாழ்த்துக்கள்.
Wednesday, March 18, 2015
#குழந்தைகளை_பள்ளிக்கு_அனுப்புங்கள் - விழிப்புணர்வு பயணம்
#குழந்தைகளை_பள்ளிக்கு_அனுப்புங்கள் என்று விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளும் ஒரு மாற்றுத்திறனாளி
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி சர்க்கார் என்ற மாற்றுத்திறனாளி காஷ்மீரில் தொடங்கி இந்தியா முழுவதும் சைக்கிளில் விழிப்புணர்வு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் நேற்று புதுச்சேரிக்கு வந்தபோது எடுத்த படம்.
நன்றி:
Saravanakumar Velusamy
சரவணக்குமார் வே (கிராமத்து இளைஞன்)
*யார் எப்படிப்போனால் எனக்கென்ன என்று திரிபவர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு மனிதர்
#குழந்தைகளை_பள்ளிக்கு_அனுப்புங்கள் என்று விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளும் ஒரு மாற்றுத்திறனாளி
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி சர்க்கார் என்ற மாற்றுத்திறனாளி காஷ்மீரில் தொடங்கி இந்தியா முழுவதும் சைக்கிளில் விழிப்புணர்வு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் நேற்று புதுச்சேரிக்கு வந்தபோது எடுத்த படம்.
நன்றி:
Saravanakumar Velusamy
சரவணக்குமார் வே (கிராமத்து இளைஞன்)
*யார் எப்படிப்போனால் எனக்கென்ன என்று திரிபவர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு மனிதர்
Subscribe to:
Posts (Atom)


















