Friday, December 6, 2013

ஊக்கம் கொடுத்தால் பொங்கும் திறமை.


மேட்டூர் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் பகல் நேர பாதுகாப்பு மையத்தில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆறு வயது முதல் 14 வயது வரை உள்ள 17 மாற்றுத்திறனாளிக்  குழந்தைகள் உள்ளனர்.

அவர்களுக்கிடையே, உலக  மாற்றுத்திறனாளர் தினத்தை முன்னிட்டு, ஓட்டப்பந்தையம், மியூசிகல் சேர் உள்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், அவர்களின் பெற்றோர்களையும் வரவழைத்து  நடத்தப்பட்டது. மூளை வளர்ச்சிக் குன்றிய  குழந்தைகளும் ஆர்வமுடன் கலந்துக் கொண்டதும், வெற்றிப் பெற்ற குழந்தைகள், பரிசுகள் எப்போது தருவார்கள் என்ற ஆர்வத்துடன் கேட்டது, பெற்றோர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.

தினமும் பெற்றோரால் தூக்கி வரப்படும் மாற்றுத்திறனாளிப் பெண் குழந்தை காவ்யா, எப்போதும் படுத்தபடியே இருப்பாள். ஆனால் அன்று சேரில் அமர்ந்து போட்டியைக் கண்டு கழித்ததுடன்,  போட்டியில் கலந்துக் கொண்ட சக குழந்தகளை உற்சாகப்படுத்தியது, ஆசிரியர்களை வியக்க வைத்தது.  

Wednesday, December 4, 2013

சேவைக்கு தலை வணங்குவோம்.


''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services
" ******
[For English version, please scroll down]
(200/10-09-2013)

கோவை மாநகராட்சி காப்பகத்தில், 10-09-2013 அன்று நமது ஈரநெஞ்சம் சார்பாக மாற்றுதிறனாளியான திரு A. யேசுராஜ் என்பவர் மூலமாக அங்குள்ள ஆதரவற்றோருக்கு முடித்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தான் மாற்றுத்திறனாளியாக இருந்த போதும் ஆதரவற்றோருக்கு மனமுவந்து முடிதிருத்தம் செய்ய முன்வந்த அவரது நல்ல மனதை ஈரநெஞ்சம் சார்பாக மனதார பாராட்டி நன்றி தெரிவித்து கொள்கிறோம். அவரது சேவை கலந்து உழைப்பு மேலும் சிறப்புற வாழ்த்துகிறோம்.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

We are happy to inform you all that a hair fixing service was given to all the inmates of the Coimbatore Corporation Home on 10-09-2013 on behalf of Eera Nenjam by Mr. A. Yesuraj, a physically challenged. Even though he is a physically challenged he has great soul to help ohphaned people. Eera Nenjam appreciates him wholeheartedly.

~Thanks
Eeraneanjam

Sunday, December 1, 2013

குறை ஒரு தடையில்லை




காஞ்சிபுரம் மாவட்டம் புத்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன். 5 வயதில் கண் பார்வையை இழந்த அவர் 8வது வயதில் பூந்தமல்லி அரசு பார்வையற்றறோர் பள்ளியில் சேர்ந்து அங்கேயே 11ம் வகுப்பு வரை படித்தார். பின்னர் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் புதுமுக வகுப்பு, பி.ஏ. ஆங்கிலம் மற்றும் எம்.ஏ. ஆங்கிலம் படித்தார்.

இதையடுத்து ராயப்பேட்டை மெஸ்டன் கல்வியியல் கல்லூரியில் பி.எட். பட்டமும், அஞ்சல்வழி கல்வி மூலமாக எம்.எட் மற்றும் எம்.பில் பட்டங்களும் பெற்றார். பார்வையற்ற மாணவர்களுக்காக பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் என்ற அமைப்பு 198ம் ஆண்டு துவங்கப்பட்டது. அப்போது அந்த அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும், சங்கத்தின் தலைவராகவும் இருந்தார்.

பார்வையற்ற ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவராக 2 முறை இருந்துள்ளார். கடந்த 1984ம் ஆண்டு அவருக்கு முதுகலை ஆசிரியராக பணிநியமனம் வழங்கப்பட்டது. இதையடுத்து 3.12.1984 அன்று சேலம் மாவட்டம் மேட்டூர் அணை அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை ஆங்கிலம் ஆசிரியராக சேர்ந்து அங்கேயே 4 ஆண்டுகள் பணியாற்றினார்.

இதைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் 18 ஆண்டுகளும், காஞ்சீபுரம் மாவட்டம் அய்யங்கார்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 5 ஆண்டுகளும் பணியாற்றினார். பின்னர் அதே பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். தற்போது அரக்கோணம் தாலுகா மேலபுலம் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பதவியேற்றுள்ளார்.

தமிழகத்தில் பார்வையற்ற ஒருவர் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டிருப்பது இது தான் முதல் முறை ஆகும். தமிழ்நாடு தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட துறை தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அவர் கூறுகையில், நான் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றிருக்கும் இந்த பள்ளியில் பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி அடைய வேண்டும் என்பது தான் என் லட்சியம் என்றார்.

# பார்வையற்ற நிலையிலும் சிறப்பாக பயின்று செயல்புரிந்து, தலைமை ஆசிரியராக உயந்திருக்கும், திரு.மனோகரன் அவர்களின் இலட்ட்சியங்கள் நிறைவேறி, சிறப்பான நிலையடைய வாழ்த்து வோம் நண்பர்களே!