23 ஆண்டுகளுக்கு பின் ஆனந்தம்
காது கேட்காத, வாய் பேச முடியாத தந்தையை 23 ஆண்டுகளாக பிரிந்து சவுதி அரேபியாவில் வாழ்ந்த மகள், தந்தையை கண்டுப் பிடிக்க எடுத்த முயற்சி வெற்றி அடைந்து ஆனந்தத்திலே முடிய உள்ளது.
1984ம் ஆண்டில் எட்டு வயதாக இருக்கும்போது (தற்போது 32 வயது ), தந்தையையும், சகோதரிகளையும் பிரிந்து விட்டேன். தந்தையை நினைத்து அழுதுக் கொண்டே இருக்கிறேன். அவர் இருப்பிடமும் தெரியவில்லை. அவரை கண்டுப் பிடித்துத் தர முடியுமா ? என
சென்னையிலுள்ள ஒரு தனிஇயார் துப்பறியும் நிறுவனத்தை அனுக, அவர்களும் தேவையான தகவல்களைக் கேட்க, எங்கள் வீடு அண்ணா நகர், தாய் சிறு வயதிலே இறந்து விட, பாட்டி தான் வளர்த்தார். வீட்டுவேலைச் செய்ய, சென்னையிலுள்ள ஒரு போலீஸ்காரர் வீட்டில் சேர்த்து விட்டனர். போலீஸ்காரர் குடும்பத்தினர் என்னைக் கொடுமைப் படுத்த, அங்கிருந்து வெளியேறி, எனது வீட்டைத் தேடி, தவறுதலாக சென்னை அண்ணா நகருக்குச் செல்ல, அங்கே முஸ்லீம்காரர், அவர் வீட்டுக்கு அழைத்துச் செல்ல, அங்கும் கொடுமைகள் தொடர்ந்தது, மீண்டும் அங்கிருந்து தப்பித்து, கன்னட பிராமனர் வீட்டில் வேலைக்கு சேர, அவர்கள் என்னை நன்றாக கவனித்து, வளர்த்து, சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவருக்கு மணம் முடித்து வைத்தனர் என நசீமா கூற,
மேற்படித் தகவல்களை வைத்து மிகவும் சிரமப்பட்டு, பல தடங்கல்களுக்குப் பிறகு, காஞ்சிபுரத்திலுள்ள ஓரிக்கை கிராமத்தில் உள்ள அண்ணா நகர் என்பதைக் கண்டுப் பிடித்து, அங்கு விசாரித்ததில், நசீமாவின் தந்தை இப்ராகிம் செரிப், ஆற்காட்டில் ஒரு ஓட்டலில் வேலை செய்து வருவதும், அருகிலுள்ள அவர் சகோதரர் வீட்டில் தங்கியிருப்பதும் தெரிய வந்தது. அவருக்கும் விபரங்களைக் கூறி, சவூதி அரேபியாவில் உள்ள நசீமாவிடமும் தந்தை கிடைத்து விட்டச் செய்தி தெரிவிக்கப்பட்டு விட்டது. கூடிய விரைவிலே இந்தியா வந்து தந்தையை அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார்.
காது கேட்காத,வாய் பேச முடியாத, வாழ்விலே பெரும் பகுதியை சோகத்திலே கழித்த 65 வயதான தந்தைக்கும் ஆனந்தம், வருடங்கள் 23 கழிந்தாலும் பாசத்தின் வலிமையினால் தந்தையை கண்டு பிடித்திருக்கும் மகளுக்கும் ஆனந்தம். அவர்கள் வாழ்வில் ஆனந்தம் என்றென்றும் நிலைத்திருக்க நாம் அனைவரும் இறைவனைப் பிரார்த்திப்போம்.
Tuesday, July 10, 2007
Monday, July 9, 2007
ஆனந்தத்திலே ஆனந்தமாக ஆரம்பிப்பதை முதலில் எழுத நினைத்திருந்தேன்.
ஆனால் நாட்கள் தான் கடந்தன. எமது வாழ்வில் நடந்த ஆனந்தமான நிகழ்வுகளும் நினைவுக்கு தற்சமயம் வரவில்லை. நிகழ்வுகளும் கண்ணுக்குப் படவில்லை. இன்று முதல்முதலாக சோகத்திற்கு பின் விழைந்த ஆனந்தத்தை அறிந்துக் கொண்டேன். அதை உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் ஆனந்தம் அடைகிறேன். இதை முன்னுரையாகக் கொண்டு அடுத்த பதிவிலே தகவலைத் தருகிறேன்.
ஆனால் நாட்கள் தான் கடந்தன. எமது வாழ்வில் நடந்த ஆனந்தமான நிகழ்வுகளும் நினைவுக்கு தற்சமயம் வரவில்லை. நிகழ்வுகளும் கண்ணுக்குப் படவில்லை. இன்று முதல்முதலாக சோகத்திற்கு பின் விழைந்த ஆனந்தத்தை அறிந்துக் கொண்டேன். அதை உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் ஆனந்தம் அடைகிறேன். இதை முன்னுரையாகக் கொண்டு அடுத்த பதிவிலே தகவலைத் தருகிறேன்.
Subscribe to:
Posts (Atom)