Thursday, August 22, 2013

தூங்காதே தம்பி தூங்காதே !!!


கார் ஓட்டுபவர்கள் தூங்கி விடாமல் தடுத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருவியை, ஜெர்மனி விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளார்கள். இந்த கருவியில் உள்ள கேமரா, ஓட்டுனரின் கண் அசைவுகளை வினாடிக்கு 200 முறை படம் பிடிக்கும் சக்திக் கொண்டது. எனவே இக்கருவியின் கணிப்பு துல்லியமானதாகவே இருக்கும். இந்த கருவிக்கு "ஐ டிராக்கர் " என பெயரிடப்பட்டுள்ளது.

எப்போதும் கவனித்துக் கொண்டேயிருக்கும், இக்கருவி ஓட்டுனர் தூங்குவது போல் தெரிந்தால், விழிப்புணர்வு அலாராமாகவோ, விளக்காகவோ இருக்கலாம்.அடுத்தடுத்து வரும் வாகனங்களுக்கும் இதனால் எச்சரிக்கை பெரும் வகையாகவும் இருக்கும். காரில் தூக்கக்கலக்கத்தினால் ஏற்படும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக அமையுமென அவ்விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


# எச்சரிக்கை விளக்குடன் அலாரமும் இணைந்திருந்தால் மேலும் அதிக பாதுகாப்பைத்தரும். கண்டுபிடித்துள்ள ஜெர்மனி விஞ்ஞானிகளை வாழ்த்துவோம்.

இன்றொரு தகவல் ! - திருமதி.மோஹனாம்மா ( Mohana Somasundram )




தமிழ்நாடு பழனியை சேர்ந்த கல்லூரிப் பேராசிரியையும், வானவியல் ஆய்வாளரும், எமது முகநூல் நண்பியுமான திருமதி.மோஹனாம்மா ( Mohana Somasundram ) அவர்களைப் பற்றி டாக்டர் விகடன் இதழிலும், காலைக்கதிர் நாளிதழிலும் செய்தி வாசித்ததும், அவருடனான சந்திப்பு நினைவுகளைப் பகிர்ந்துக் கொள்ள தொடர்புக் கொண்டோம். அவரும் மிக்க மகிழ்வுடன் அளவுலாவினார். அவர் நலனும், பணியும் சிறக்க வாழ்த்துக் கூறி விடைப் பெற்றோம்.