Saturday, July 25, 2015

வாழ்த்துக்களை பகிர்வோம் – இன்றொரு தகவல்







ஒரு நாள் செல்லிடை பேசியில் எமக்கொரு அழைப்பு. சேலம் மாவட்ட எடப்பாடி என்ற ஊரிலிருந்து பேசுவதாகவும், பி.ஏ. பொருளாதாரம் படித்துள்ள, 
வெளியே சென்றுவர இயலாநிலையுடன் சக்கர நாற்காலி 
துணையாக கொண்டு இயங்குகின்ற, கால்கள் செயலாற்ற ஒரு மாற்றுத்திறனாளி என்றும் அறிமுகப்படுத்திக் கொண்ட குமார்,

ஒரு பழைய கணினி ஒன்றை நண்பரொருவர் அன்பளிப்பாக கொடுத்திருப்பதாகவும், இணைய இணைப்புக்காக 
‘’டேட்டா கார்டு’’ ஒன்று கிடைத்தால் மிக்க உதவியாக இருக்குமென வேண்டுகோள் விடுத்தார். 
எமது மூலம் இச்செய்தியை அறிந்த முகநூல் நண்பர் திரு. அல்போன்ஸ் சேவியர் அவர்கள் தன்னிடமிருந்த ‘’டேட்டா கார்டு’’ஐ தனது தாயார் மூலம் மகிழ்வுடன் வழங்கினார்.

#அவருக்கு நமது மனமுவந்த வாழ்த்துக்களை பகிர்வோம் நண்பர்களே.


*புகைப்படத்தில்: நண்பர் திரு. அல்போன்ஸ் சேவியரின் தாயார் அவர்கள் வழங்க, குமாரின் அப்பா பெற்றுக் கொள்கிறார்.

Sunday, July 5, 2015

வாழ்த்துவோம் நண்பர்களே!




 இன்று முடிவுகள் வெளியிடப்பட்ட இந்திய சிவில் சர்வீஸ் ( குடிமுறை அரசுப் பணி) தேர்வில், முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ள,டெல்லியை சேர்ந்த பெண்மணியான *ஈரா சிங்கால், ஒரு மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது. இவர்  இந்திய வருவாய் துறையில் அதிகாரியாய்  பணியாற்றி வருகிறார். அவரைக் குறித்து சிறு குறிப்பு:-


சட்டத்தை உடைத்து
சாதனை படைத்த
மாற்றுத்திறனாளி
.
ஐஏஎஸ் தேர்வில் தேசிய
அளவில் முதல் இடத்தைப்
பிடித்து மகத்தான
சாதனையைப்
புரிந்துள்ளார் ஐரா
சிங்கால். 31 வயதாகும்
மாற்றுத்திறனாளி
யான
ஐரா, ஐஏஎஸ் தேர்வில்
தேசிய அளவில்
முதலிடத்தைப் பெற்ற
மாற்றுத் திறனாளி என்ற
அசத்தலான சாதனைக்குச்
சொந்தக்காரராகி
உள்ளார். 

31 வயதாகும்
ஐரா சிங்கால் இந்திய
வருவாய் பணி (ஐஆர்எஸ்)
அதிகாரி ஆவார்.
ஆனால், இந்தப் பதவியைப்
பெற இவர் பல்வேறு
சட்டச் சிக்கல்களை ஆரம்ப
காலத்தில்
எதிர்கொண்டார். மாற்றுத்
திறனாளியாக
இருந்ததால் பல
சிக்கல்களுக்கு ஆளானார். 

.
நீ ஒரு மாற்றுத்
திறனாளி. உன்னால்
தனியாக நிற்கக்கூட
முடியாது.
துப்புரவுத்
தொழிலாளியாக
இருக்கக் கூட
லாயக்கில்லை என 

அண்டை வீட்டாரின் கேலி, உடன்
படித்தவர்களின்
கிண்டல்களால் சிக்கி சில சமயங்களில் 
துவண்டபோதும் மனம்
தளறவில்லை.


 அசராத மன
தைரியத்தால் இன்று
ஐஏஎஸ் தேர்வில்
முதலிடம் பெற்று
முத்திரை பதித்தவர்
ஐரா. டெல்லியைச் சேர்ந்த
ராஜேந்திர சிங்கால்,
அனிதா சிங்கால்
தம்பதியின் ஒரே மகள்
ஐரா சிங்கால். லாரென்டோ
கான்வென்ட் பள்ளியில் 10-
ஆம் வகுப்பு முடித்த
ஐரா, தௌலா கானில் உள்ள
ராணுவப் பள்ளியில் 12-
ஆம் வகுப்பை முடித்தார்.
இதையடுத்து, நேதாஜி
சுபாஷ் தொழில்நுட்பக்கல்வி நிறுவனத்தில்
பி.இ (கணினிப் பொறியியல்) 

பட்டப்படிப்பு முடித்தார்.
பின்னர் டெல்லி
பல்கலைக்கழகத்தி ல்
எம்பிஏ (விற்பனை,
நிதி) முதுகலைப்
படிப்பிலும் தேர்ச்சி
கண்டார்.
அப்போது இவருக்கு
வேலைவாய்ப்புக்
கிடைத்தது.
இதையடுத்து, 2008
முதல் 2010 வரை
காட்பரி இந்தியா
நிறுவனத்தில்
வாடிக்கையாளர்
மேம்பாடு
அதிகாரியாக
பணியாற்றினார்.
முதுகுத்தண்டு
வளர்ச்சி குறைபாடால்
பிறவியிலேயே
பாதிக்கப்பட்ட
இவருக்கு அரசுப்
பணியில் சேர வேண்டிய
ஆர்வம் சிறு
வயதிலிருந்தே உள்ளது.
அதனால் பட்டப்படிப்பு
முடித்தது, மத்திய
அரசுப் பணிகள்
தேர்வாணையமான(யு
பிஎஸ்சி) தேர்வுக்கு
ஆயத்தமாகி வந்தார்.
2010-இல் நடந்த தேர்வில்
இவர் தேர்ச்சி பெற்று
ஐஆர்எஸ் பணியை
இவருக்கு வழங்க மத்திய
அரசு இசைவு
தெரிவித்தது. இதைத்
தொடர்ந்து, மருத்துவத்
தகுதிப்
பரிசோதனைக்கு இவர்
ட்படுத்தப்பட்டார்.
அப்போது இவருக்கு
பல்வேறு சோதனைகள்
வந்தன.
மாற்றுத்திறனாளியாக
ஐரா சிங்கால்
இருந்தது, ஐஆர்எஸ் பணி
அதிகாரி வெறும் 4.5
அடி மட்டுமே உயரம்
இருப்பதால் அவரால்
அப்பணியை செய்ய
முடியாது என்று கூறி
அவருக்குப் பணி வழங்க
மத்திய அரசு
மறுத்துவிட்டது.
இதனால் கடும்
கோபமடைந்த ஐரா,
மத்திய நிர்வாகத்
தீர்ப்பாயத்தில்
வழக்குத் தொடர்ந்தார்.
அதில் அவருக்கு
சாதகமாகத் தீர்ப்பு
வந்தது. இதையடுத்து,
2013-இல் ஐஆர்எஸ்
அதிகாரியாக
நியமிக்கப்பட்ட அவர்
மத்திய சுங்கத்
துறையில் உதவி
ஆணையராகத் தற்போது
டெல்லியில் பணியாற்றி
வருகிறார். அரசுப்
பணிக்கு வரும்
முன்னதாகவே தனது
உரிமையை நிலைநாட்டி
வழக்குத் தொடர்ந்தவர்
ஐரா. கால்பந்துப்
போட்டியில் அதிக
ஆர்வமுடையவர். சட்டம்
என்பது அனைவருக்கும்
ஒன்றே தாரக மந்திரம்
கொண்டவர். விடா முயற்சி
விஸ்வரூப வெற்றி என்ற
சொல்லை அடிக்கடி
சொல்லிக் கொள்வாராம்.
ஆங்கிலம், ஹிந்தி மொழி
மட்டுமன்றி ஸ்பெயின்
நாட்டின் ஸ்பானிஷ்
மொழியையும் சரளமாகப்
பேசும் திறனைப்
பெற்றுள்ளார் ஐரா
சிங்கால்


தமிழகத்தைப் பொருத்தவரையில் இந்திய சிவில் சர்வீஸ் ( குடிமுறை அரசுப் பணி) தேர்வில், 118 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். வனத்துறை அதிகாரியான கோவை சாருஸ்ரீ, அகில இந்திய அளவில் 6ம் இடமும்,  தமிழகத்தில் முதலிடமும் பெற்றுள்ளார்.

*முதலிடம் பெற்றுள்ள மாற்றுத்திறனாளி யான ஈரா சிங்கால் தமிழகத்தில் வெற்றிப் பெற்றுள்ள அனைவரையும் வாழ்த்துவோம்.

‪#‎பாராட்ட நினைத்தால் கருத்திடுங்கள்

Wednesday, July 1, 2015

மாற்றுத் திறனாளிகளுக்கு மாதிரி பள்ளிகள்


தமிழகத்தில், மாற்றுத் திறனாளி மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில், மாவட்டத்திற்கு ஒரு அரசு பள்ளியை, மாற்றுத் திறனாளிகளுக்கான  மாதிரி பள்ளியாக மாற்ற, மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்களை, அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவு இட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் மாணவர்கள் மற்ற மாணவர்களுடன் அமர்ந்து படிக்கும் வகையில் வகுப்பறை சூழல், சிறப்பு வசதிகளுடன் கூடிய கழிவறை, குடிநீர், சாய்தள வசதி போன்றவற்றை மேம்படுத்த உத்திரவு இடப்பட்டுள்ளது.
வந்து செல்ல சிரமமில்லாத வகையில் மாதிரி பள்ளியை தேர்வு செய்யும் பணியுடன், நவம்பர் 30ம் தேதிக்குள் முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
- நாளிதழ் செய்தி,

#இதை வரவேற்கின்ற இச்சமயத்தில், ஒரு  மாற்றுத் திறனாளி என்ற முறையில் எமக்கு சில சந்தேகங்கள்:-


1) அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழெனில், அனைத்து அரசு பள்ளிகளிலும் வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் தானே, அருகில் உள்ள பள்ளிகளில் வந்து அனைத்து   மாற்றுத் திறனாளி மாணவர்கள் வந்து படிக்கயியலும்!
2) மாவட்டத்திற்கு ஒன்று என்றால், அந்த மாவட்டத்திலுள்ள மற்ற மாற்றுத் திறனாளி மாணவர்கள் வந்து தங்கி படிக்க ஏற்பாடு செய்ய முடிவெடுக்கப் பட்டுள்ளதா?
*ஆமெனில்,
செய்தியில் தெளிவு படுத்தபடவில்லையே.
3) சிறப்பு வசதிகள் என்றால்,
a) நடக்கவியலா  மாற்றுத் திறனாளி மாணவர்கள் வகுப்பறையில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி வாசிக்கவும்,
b) உயர குறைப்பாடு உள்ளவர்கள் அமரும் வகையில் உயர்த்தி தாழ்த்தும் வகையில் வசதியான தனி நாற்காலிகள் வழங்கப்படுமா?
c) பார்வை  குறைபாடு உள்ளவர்களுக்கு முன்னிருக்கைகளில் அமர வசதி, மூக்கு கண்ணாடிகள் வழங்கப்படுமா? 
d) பார்வையற்ற, செவி கேளா மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க, அப்பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுமா? தனி சிறப்பு ஆசிரிய பணியிடங்கள் உருவாக்கப்படுமா?
4) கழிவறைகளின் அமைப்பு சாய்தளத்துடன்  இருந்தாலும், உயரமாக அமைக்கப்பட்டிருந்தால்,  மாற்றுத் திறனாளி மாணவர்களின்  அவசரத்துக்கு உதவாமல் அல்லல்பட வைக்கும் 
*தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள பொது கழிவறைகள் அனைத்தும் சாய்தளத்துடன் அமைக்கப்பட்டிருப்பினும், தரைதளத்தில் வசதியாக சென்று பயன்படுத்தும் வகையில் இல்லாமல் உயரத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளது.
இதை கவனித்தில் கொண்டு மாற்றுத் திறனாளி மாணவர்கள் இலகுவாக பயன்படுத்தும் விதத்தில் அமைக்கப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதால், இந்திய வகை, மேல்நாட்டு வகையென இரு வகையும் கைப்பிடிகளுடன் கூடிய விசாலமான கழிவறைகள் சக்கர நாற்காலிகள் சிரமமில்லாத வகையில் உள்ளே சென்று திரும்பி வெளிவரும் வகையில் அமைக்கப்பட வேண்டும், சிறுநீர் கழிப்புக்கும் வசதியான அமைப்புகளை அமைக்க வேண்டும், உடனுக்குடன் சுத்தமாக, உலர்நிலையில் பராமரிக்க ஆண், பெண்  பணியாட்கள் நியமிக்க பட வேண்டும். 
*குறைவற்ற நீர்   வசதியும் செய்யப்பட வேண்டும் 


#மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான அத்தியாவசிய அடிப்படை  வசதிகளுடன் மாதிரி பள்ளிகள் அமைக்கப்படுவதுடன், அவசரகதியில் இக்கல்வியாண்டிலேயே துவக்குவதை விட, சரியான திட்டமிடலுடன், முழுமையான வசதிகளுடன் உருவாக்கி அடுத்த கல்வியாண்டில் தாமதமின்றி செயல்படுத்தினால், தமிழக அரசுக்கும், அதிகாரிகளுக்கும்  சிறப்பையும் பெருமையையும் அளிக்கும்.