
அவர்களுக்கிடையே, உலக மாற்றுத்திறனாளர் தினத்தை முன்னிட்டு, ஓட்டப்பந்தையம், மியூசிகல் சேர் உள்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், அவர்களின் பெற்றோர்களையும் வரவழைத்து நடத்தப்பட்டது. மூளை வளர்ச்சிக் குன்றிய குழந்தைகளும் ஆர்வமுடன் கலந்துக் கொண்டதும், வெற்றிப் பெற்ற குழந்தைகள், பரிசுகள் எப்போது தருவார்கள் என்ற ஆர்வத்துடன் கேட்டது, பெற்றோர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.
தினமும் பெற்றோரால் தூக்கி வரப்படும் மாற்றுத்திறனாளிப் பெண் குழந்தை காவ்யா, எப்போதும் படுத்தபடியே இருப்பாள். ஆனால் அன்று சேரில் அமர்ந்து போட்டியைக் கண்டு கழித்ததுடன், போட்டியில் கலந்துக் கொண்ட சக குழந்தகளை உற்சாகப்படுத்தியது, ஆசிரியர்களை வியக்க வைத்தது.