Saturday, November 16, 2013

உற்சாகப்படுத்துவோம் வாழ்த்துக்கள் கூறி.



மாற்றுத்திறனாளிகளுக்கான, தேசிய பாரா (ஒலிம்பிக்?)  நீச்சல் போட்டியில், திண்டுக்கல்லில் பயிற்சி பெற்ற தமிழக வீரர்கள்,  5 தங்கம், 10 வெள்ளி, 12 வெண்கல பதக்கம் வென்றுள்ளனர்.

பெங்களூருவில், 13வது தேசிய பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டியில், 17 மாநிலங்களை சேர்ந்த 340 மாற்றுத்திறனாளிகள், மொத்தம் 176 பிரிவுகளில் பங்கேற்றனர்.

திண்டுக்கல்லில் பயிற்சி பெற்ற 15 மகளீர் உள்பட 39 பேர் பங்கேற்ற தமிழக அணியில், 13 பேர்,    5 தங்கம், 10 வெள்ளி, 12 வெண்கல பதக்கம் வென்றுள்ளனர்.

சப்-ஜூனியர் மகளீர் பிரிவில் சென்னையை சேர்ந்த மயூரி, 3 தங்கம் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார். சீனியர் ஆண்கள் பிரிவில் தர்மபுரியை சேர்ந்த வெங்கடேசன் 2 தங்கம், 2வெள்ளி பதக்கங்கள் பெற்று சாம்பியனானார். மதுரையை சேர்ந்த பெருமாள் 2 வெள்ளி பதக்கங்கள் வென்றுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் சென்ற ஆண்டு 7ஆம் இடத்திலிருந்த தமிழகம், 5ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.வெற்றிப் பெற்ற மாற்றுத்திறனாளி நீச்சல் வீரர்களை, தமிழ் நாடு அனைத்து  மாற்றுத்திறனாளிள் சார்பிலும் மேலும் ஊக்கத்துடன் செயல்பட்டு உலக பாரா ஒலிம்பிக்கிலும் சாதனைப்படைக்க வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். பதக்கங்கள் பெறாதவர்கள் தோல்வியாளர்கள் அல்ல. அடுத்த முறை சிறப்பான சாதனையாளர்களாக திகழவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நண்பர்களே! நீங்களும் வாழ்த்துங்களேன்.

# இதுவரை போட்டிகளைப் பற்றி அறியாத, அறிந்தும் கலந்துக் கொள்ளாத மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளே! உங்கள் திறமையை வெளிச்சத்திற்கு கொண்டு வாருங்கள். உங்கள் மாவட்ட சமுக நலத்துறையை அணுகி, உங்களை பதித்துக் கொள்ளுங்கள். வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும் வரை பயிற்சியைத் தொடருங்கள். வாழ்த்துக்கள்.