Wednesday, August 7, 2013

இன்றொரு தகவல் - சொல்வோம் வாழ்த்துக்களை.



.Mrs.vijayalakshmi  madurai




14 மாஸ்டர் டிகிரி, முன்று எம்.பில்., இரண்டு பி.ஹெச்டி. பெற்றதுடன், 64 சாஃப்ட்வேர்களை தயாரித்த, மதுரையின் முதல் பெண் கணினி மென்பொருள் ஏற்றுமதியாலரான திருமதி. விஜயலட்சுமி அவர்களை முதலில் வாழ்த்துவோம்.

காதல் கணவரை 25 வயதிலேயே கணவரை இழந்தபோது கம்பியூட்டர் இன்ஜினியரிங் படித்திருந்ததால், தனது குழந்தைகளுக்காக தற்கொலை முடிவை கைவிட்டு, வங்கியில் 25 இலட்சம் ரூபாய் கடன் பெற்று, 12 ஊழியர்களுடன் வீட்டிலேயே, சிறிய சாஃப்ட்வேர் நிறுவனத்தை ஆரம்பித்தவர், கடுமையான உழைப்பினால் இன்று 400 ஊழியர்களுடன் மதுரை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் என நான்கு கிளைகளாக வளர்ந்துள்ளது.

கிராமத்து இன்ஜினியரிங் மாணவர்கள் கணினி தொடர்பாக படித்திருந்ததாலும், தொழில் ரீதியான திறனை வளர்த்துக் கொள்ளாததால், படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காமல் தடுமாறுகின்றனர். எனவே நான் பெற்ற நன்மைகளுக்கு பிரதிபலனாக, "வெப்டெவலெப்பிங்" பயிற்சியை இலவசமாக கற்று   தந்து, 'மைக்ரோசாஃப்ட்' துணையுடன் 'ஆன்-லைன்' தேர்வு நடத்துகிறேன்.

இத்தேர்வு முடிவுகள், மைக்ரோசாஃப்டின் இணையதளத்திலேயே வெளிவருவதால், வென்றவர்களுக்கு உலகின் முக்கிய எம்.என்.சி.,கம்பெனிகளிலேயே இலட்ச கணக்கில் சம்பாரிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. வெளியிடங்களில் இப்பயிற்சிக்கு ஒரு இலட்சம் ரூபாய் வசூலிக்கின்றனர். இங்கு இலவசமாகவே.

ஆண்டுக்கு 200 கிராம  மாணவர்கள் வீதம், இரண்டு ஆண்டுகளாக பயிற்சி அளிக்கிறேன்.இதுவரை யாரும் தோல்வி அடையவில்லை. மேலும் விதவை பெண்களுக்கு கணினி பயிற்சி, டெக்னிகல் டிரைனிங், மன உறுதியை வளர்க்க கவுன்சலிங் போன்றவற்றை வழங்கி வழிக்காட்டுகிறேன்.

சாஃப்ட்வேர் துறையில் வெற்றி பெற்றமைக்காக, சிறந்த பெண் தொழில் முனைவோருக்கான விருதை, மத்திய, மாநில அரசுகளிடமிருந்தும், இங்கிலாந்தின் 'விமன் ஆஃப் தி இயர்' விருதும் பெற்றிருக்கிறேன் என தெரிவித்திருக்கும் திருமதி.விஜயலட்சுமி அவர்களை மீண்டும் வாழ்த்துவோம்.

தொடர்புக்கு : 98421 74800