Tuesday, August 20, 2013

பரந்த மனம் இவருக்கு - பேராசிரியர் பெரியார் தாசன்










சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பேராசிரியர் பெரியார் தாசன் நேற்று (19/08/2013 ) இறைவனடி அடைந்து விட்டார். அவருடைய விருப்பப்படி, அவருடைய கண்கள் சங்கர  நேந்திராலயாவுக்கும், உடல் சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும் தானமாக வழக்கப்பட்டது.

அவரின் உயர்ந்த எண்ணத்திற்கு தலை வணங்கி, ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். 
 







தள்ளாத வயதிலும் ஒரு சாதனை.



சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 25 ஆண்டுகளாக காது மூக்குத் தொண்டை நிபுணராக பணியாற்றிவரும் 88 வயதான டாக்டர் ராமதாஸ், இன்று சென்னை பல்கலையில் நடக்கும் பட்டமளிப்பு  விழாவில் காஎன்னை து மூக்குத் தொண்டை சிறப்பு மருத்துவத்திற்கான பட்டத்தைப் பெறுகிறார்.

ஆந்திராவில் பிறந்த டாக்டர் ராமதாஸ், 1953ல் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., பட்டமும், தொடர்ந்து காது மூக்குத் தொண்டை அறுவை சிகிச்சைத் துறையில் முதுகலைப் பட்டமும், இப்பிரிவிலேயே பட்டய படிப்பும் முடித்து சென்னை அரசு பொது மருத்துவமனையில் காது மூக்குத் தொண்டை பிரிவில் பணியாற்றியதுடன், அத்துறையின் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

வயதிலும், படிப்பிலும், பணியிலும் உயர்நிளையிலுள்ள டாக்டர் ராமதாஸ் நீண்ட ஆயுளுடன் நிலையான நலனுடனிருந்து பணி மென்மேலும் சிறந்து நீங்கா புகழடைய, நமது சார்பில் வணக்கங்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வோம்.