தன்னை வளர்த்து ஆளாக்கிய கிராம மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தியுள்ளார் அமெரிக்காவில் வசித்து வரும் கோடீஸ்வர டாக்டர். தனது கிராமத்திற்காக அவர் அளித்துள்ள தொகை ரூ.125 கோடி!!!!!!!!!!
கேரளாவில் செம்மங்கரை என்ற சிறிய கிராமத்தில் 81 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர் குமார் பாயுல்யன். தீண்டதகாதவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட ஆதி திராவிடர் இனத்தைச் சேர்ந்தவர். பெற்றோர் மிகவும் ஏழைகள். படிக்க வைக்க ஆட்களில்லை. ஆனால் படிக்க வேண்டும் என்று குமாருக்கு மிகவும் அதிக ஆசை. உதவ வந்தனர் கிராம மக்கள்.
அவர்கள் உதவியால் நன்கு படித்தார். பள்ளியில் படிக்கும் போது செருப்பு கூட போட வசதியின்றி இருந்தார். பள்ளி இறுதித்தேர்வில் பெற்ற சிறப்பான மதிப்பெண்கள், மருத்துவ கல்லூரியில்முன்னணி கிடைக்க செய்த்து. அரசின் உதவித்தொகை மற்றும் கிராம மக்களின் உதவியால் சிறப்பாக படித்து முடித்தார். கல்லூரியில் தான், முதன் முறையாக ஷூ அணிந்தார்.
அமெரிக்காவில் வேலை கிடைத்து அங்கு சென்றார். நரம்பியல் துறையில் கைத்தேர்ந்த நிபுணராக ஆனார். இவர் சிகிச்சையால் நோயாளிகள் விரைவில் குணமடைந்ததால், அதிக நோயாளிகள் இவரிடம் குவிந்தனர். பணம் கோடிகோடியாக இவரிடம் குவிந்தது. மிக விலை உயர்ந்த மெர்சிடஸ் பென்ஸ் கார்கள் ஐந்துக்கும், ஒரு விமானத்திற்கும் இவர் சொந்தக்காரராக இருந்தாலும், தமது சொந்த கிராமத்திற்கு வந்து சில நாட்கள் தங்கி விட்டு அமெரிக்காவுக்கு திரும்பிய டாக்டர் குமார், தமக்கு உதவிய சொந்த கிராம மக்களுக்கே, தான் சம்பாதித்த பணத்தில் பெரும்பகுதியை செலவிட முடிவு செய்தார். அதனால் செம்மங்கரை கிராமத்தில் மிகப்பெரிய நரம்பியல் மருத்துவமனையும், ஒரு இயற்க்கை மருத்துவமனையும் நிறுவ ரூ.125 கோடி அளித்துள்ளார்.
'நான் பிறக்கும் போது எதுவும் என்னிடம் எதுவுமில்லை. என்னை படிக்க வைத்தவர்கள் என் கிராமத்து மக்கள். அவர்களுக்கு கைமாறு செய்ய வேண்டாமா ? அது தான் இந்த சிறிய உதவி' என்று சுருக்கமாக கூறுகிறார் டாக்டர். குமார்.
எனக்கு வயது 81 ஆகிவிட்டது.வாழ்க்கையில் சாதிக்க வேண்டுமென்று நான் நினைத்த அத்தனையும் சாதித்து விட்டேன். 'என்னை இந்தளவுக்கு உயர்த்திய என் கிராம மக்களுக்கு கைமாறு செய்வது தான் எனது கடைசி லட்சியம். எந்த நேரத்திலும் சாவு ( மரணம்) என்னைத்தேடி வரலாம், அப்போது மகிழ்ச்சியான மனிதனாக சாவேன்'என்று டாக்டர். குமார் கூறியது, மனத்தை உருக செய்வதாக உள்ளது.
மரணம் அனைவருக்கும் பொதுவானதுதான்,ஆனாலும் இப்படிப்பட்ட ஒரு நல்லிதயம் படைத்த இம்மருத்துவருக்கு இயற்க்கையின் அழைப்பு மகிழ்ச்சியாக அமைய நம்மைப் படைத்த இறைவனை மனமுருக பிரார்த்தனை செய்துக் கொள்வோம்.
Sunday, August 5, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment