Wednesday, August 8, 2007

ஜீவன்களின் நட்பு

வெவ்வேறு வீடுகளில் வளர்ந்தாலும், இனத்திலும் மாறுப்பட்ட இரண்டு வாயில்லா ஜீவன்களின் நட்பைப் பற்றி பார்போமா !
ஆந்திர மாநிலம் மெகபூப் நகர் மாவட்டம் தேவரகத்ரா ரயில் நிலையப் பகுதியில் வசிக்கும் கவுஸ்பாபா, நான்கு ஆண்டுகளுக்கு முன், வீட்டில் வளர்பதற்காக இரண்டு வாத்துகளை வாங்கி வந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த எக்தான், ஒரு நாயை வளர்த்து வருகிறார். தினமும் காலை நேரத்தில் இரைத் தேட, இந்த வழியாக செல்லும் இரண்டு வாத்துகளில் ஒரு வாத்துக்கும், இந்த நாயிக்கும் நட்பு ஏற்பட்டது. கிராமத்தில் தினமும் சந்தித்துக் கொண்ட நாயும், வாத்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒன்றை ஒன்று பிரியா நண்பர்களாகி விட்டன.
இந்த நட்பிலே விசேஷம் என்னவென்றால்,இந்த கிராமத்தினர் யாரேனும் வாத்தை அடிக்கவோ, துரத்தவோ வந்தால், நண்பனான நாய் அவர்கள் மீது கடிக்கப் பாய்கிறது. அதேபோல நாயை அதட்டினாலோ, துரத்தினாலோ, வாத்து சிறகை விரித்தபடி,ஓவென கூச்சல் போட்டுக் கொண்டு அவர்கள் மீது பாய்ந்து ஓடுகிறது. சில நேரங்களில் தனியாக செல்லும் நாயோ, வாத்தோ நீண்ட நேரம் ஒன்றை ஒன்று காணவில்லையென்றால் கவலையுடன் அங்குமிங்கும் கத்தியபடி அலைகின்றன.
பகல் நேரத்தில் இணைந்தே திரியும் நாயிம் வாத்தும் இரவு நேரத்தில் அவரவர் எஜமானர்களின் வீடுகளுக்குச் சென்று அடைந்து விடுகின்றன. மறுநாள் காலை சூரிய உதயத்திற்கு முன்பே இரண்டும் இரைக்காக கிராம சந்துபொந்துகளில் இணைந்தே திரிகின்றன.இப்பகுதி மக்களிடையே இந்நட்பு பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

No comments: