Friday, June 20, 2008

வேதனையில் சாதனை - 1

ஊனமுற்றோரின் உரிமைக்காக போராடும் ஜார்க்கண்ட்டை சேர்ந்தவரும், கம்ப்யூட்டர் நிறுவனத்தால் வேலையிலிருந்து துரத்தி விடப்பட்ட பார்வையிழந்த பெண்ணுமான ' சோனாலி ' தன்னம்பிக்கையை இழக்காமல் போராடி, தன்னைப் போன்ற பார்வையிழந்த மற்றவர்களுக்கு உதவி செய்யும் அளவிற்கு உயர்ந்துள்ளார். அவரைப் பற்றி சிறிது தெரிந்து கொள்வோமா!



சில ஆண்டுகளுக்கு முன், ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வரவேற்பாளராக பணிபுரிந்தார். திடீரென ஏற்பட்ட நோய் காரணமாக இவரது கண் பார்வை பறிபோனது. கம்பியூட்டர் நிறுவனம் உடனடியாக இவரை வேலையிலிருந்து துரத்தி விட்டது. பிறகு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.



பார்வை பறிபோனதற்காக, உரிமை மறுக்கப்படுவது குறித்து வேதனை அடைந்தவர், சாதித்துக் காட்ட வேண்டும் என உறுதி பூண்டார். அத்தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் 'இந்திராகாந்தி தேசிய திறந்த நிலை பல்கலையில் படித்து பி.ஏ., பட்டம் பெற்றார். இதற்கிடையே தெற்காசிய பிராந்தியத்திற்கான பார்வையிழந்த பெண்களுக்கான தலைமைப்பண்பியல் குறித்த பயிற்சி திட்டம் கொல்கட்டாவில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்கு ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து 'சோனாலி ' தேர்வானார். பயிற்சியை வெற்றிகரமாக முடித்து திரும்பிய அவர், ஜாம்ஷெட்பூரில், பார்வையிழந்தவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாமை துவக்கினார்.

இதன் முகாம் மூலம் பார்வையிழந்த ஏராளமானோருக்கு, பல்வேறு பயிற்சிகளை அளித்து, அவர்களது ஒளிமயமான எதிர்காலத்திற்கு உதவி வருகிறார். இதைபற்றி 'சோனாலி' கூறியதாவது;

கம்ப்யூட்டர் நிறுவனம் வேலையை பறித்தவுடன், சாதித்துக் காட்ட முடிவு செய்தேன். தன்னம்பிக்கையை இழக்காமல் போராடி, என்னைப்போல் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கு உதவும் அளவிற்கு உயர்ந்துள்ளேன். உடல் ஊனமுற்றோருக்கு உள்ள உரிமைகள் என்ன என்பது பற்றி அவர்களுக்கு பயிற்சி அளிக்கிறேன். எதிர்கால வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ள அவர்களை தயார்படுத்துகிறேன். அடுத்தவர்களுக்கு உதவும் இந்த பணி, எனக்கு திருப்தியாக உள்ளது என்று 'சோனாலி' கூறியுள்ளார்.

இவரை போன்றவர்களை பார்த்தாவது நாமும், நம்மை உறுதி படுத்திக்கொள்வதுடன், மற்றவர்களுக்கும் முடிந்தவரை வழிகாட்டியாகவும் இருந்து உதவ வேண்டும்.


No comments: