Friday, December 26, 2008

வார்த்தைகள் இல்லை பாராட்ட.

வார்த்தைகள் இல்லை பாராட்ட.

உத்திர பிரதேசம் லக்னோவில் உள்ள பாட்ஷா நகரை சேர்ந்த திவ்யா ( 21 ), இவரின் செயலுக்கு, சொல்லுக்கு, மேலும் சிறப்பான வார்த்தை கிடைக்காமல் தடுமாறுகிறேன். இவரது இளய சகோதரர் ஆபூர்வாவுக்கு திடீரென சிறுநீரகம் சரியாக வேலை செய்யவில்லை. உடனடியாக சிறுநீரக  மாற்று அறுவை செய்ய வேண்டுமென டாக்டர்கள் தெரிவிக்க, திருமணம் நிலையிலிருந்த நித்யா, தனது சிறுநீரகத்தை அளிக்க முன்வந்தார்.
 இதை மாப்பிள்ளையின் பெற்றோர் விரும்பவில்லை. திருமணத்தையும் நிறுத்தி விட்டனர். ஆனால் மருத்துவமனையிலிருந்து திரும்பிய நித்யாவோ, நான் எனது கடமையை செய்தேன். புதிதாக வருகின்ற உறவுக்காக 21 வருட சகோதர உறவை விட முடியாது. மனிதநேயமிக்க மிக்க செயலாகத்தான் கருதுகிறேன் என்று கூறியதுடன், மேலுமொன்றை கூறியுள்ளார். அதற்காக தான் என்ன வார்த்தைகள் சொல்லி, எழுதி பாரட்டுவதென்றே தெரியவில்லை. ''என் திருமணத்தை நிறுத்தியவர்கள் மேல் எந்த கோபமும் கிடையாது''  என்ற இந்த ஒரு வார்த்தையே, அவரின் எண்ணத்தின் மேன்மையை பறைசாற்றுகிறது. அவரை ஞானியாக, இல்லை அதற்கும் மேலாக... என்னிடம் வார்த்தைகளில்லை பாராட்ட. ஆனால் ஒன்றே ஒன்றை செய்வேன், அவர் வாழ்நாள் முழுமையும் நோயு நொடியின்றி அனைத்து நலன்களும் பெற்று வாழ அருளும்படி இறைவனிடம் இன்றே வேண்டிக்கொள்வேன்

No comments: