Thursday, March 26, 2015

மாற்றுத்திறன் படைத்தோருக்கான திருமண விழா - 2015

சென்ற  மார்ச் 8, 2015. ஞாயிறு கிழமை காலை 

சேலம் தமிழ் சங்க அரங்கத்தில் சேலம் மாவட்ட உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கமும், சேலம் காஸ்மாஸ் அரிமா சங்கமும் இணைந்து '' மாற்றுத்திறன் படைத்தோருக்கான திருமண விழா'' நடைப்பெற்றது. அதில் சில கட்சிகளும், செய்திகளும்.

 தலைமை உரையாற்றிய:
1)  சேலம் மாவட்ட சங்க த் தலைவர் அரிமா Dr.P. அத்தி அண்ணா MJF 


முன்னிலை வகித்தவர்களில் சிலர் :
2) சேலம். நரசுஸ் காபி கம்பெனி லிமிட்டெட், மேலாண்மை இயக்குனர் திரு..சிவானந்தம்,



3) சங்க நிரந்தர காப்பாளர் அரிமா Dr. Love  'O'  A.K.நாகராஜன் MJF 



சிறப்பு அழைப்பாளர்கள்:
4) சேலம் மாவட்ட ஆட்சி தலைவர் திரு.K.மகரபூஷணம் IAS  



5) தென்னக இரயில்வே, சேலம் டிவிஷன், 
சீனியர் டிவிஷனல் கமர்சியல் மேனேஜர் திரு K,P.தாமோதரன் 



மற்றும் பலர் வாழ்த்துரை வழங்க   '' மாற்றுத்திறன் படைத்தோருக்கான திருமண விழா'' சிறப்பாக நடந்தேறியது..

6) விழா துவங்கும் முன் சேலம் மாவட்ட உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்க ஆலோசகரான எம்முடன், எமக்கடுத்து  வீற்றிருக்கும் மாவட்ட சங்க  துணைத்தலைவர் திரு R.அரவிந்தகுமார் B.A.,  மாவட்ட சங்க பொருளாளர் திருS.வெங்கட்ராமன் B.Sc.



7) திருமண ஜோடிகளில் ஒருவரும், எமக்கு முன்பே அறிமுகமான இரு கால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளி நண்பருமான கிராபிக் டிசைனராக பணிபுரிந்து வரும் K.செந்தில் குமார் தனது மனைவி திருமதி V.வித்யாவுடன். அவர் மனைவியும் ஒரு இரு கால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளி  என்பது குறிப்பிடத்தக்கது.



8) யான் தருமபுரி மாவட்ட சங்க பொதுசெயலாளராக செயலாற்றி விடுபட்டபின் திருமதி  ஜானகி அவர்கள் அமரராகும் வரை பொறுப்பிலிருந்தார்கள். அவருக்குப்பின் பொறுப்பேற்ற   தருமபுரி மாவட்ட உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கத் தலைவர் திரு Ln.K.A.மாணிக்கம் அவர்களும், சங்க நிர்வாகிகளுடனும்  




9) கவிஞர் அரிமா திருமதி.மாலதி அனந்தபத்மநாபன், தருமபுரி அவர்களுடன். #இவரும் ஒரு மாற்றுத்திறனாளியே. மாற்றுத்திறனாளிகளின் சேவையில் ஈடுபாடு கொண்டு செயல்பட்டு வருபவர்.   



10) இவ்விழாவிலே புதிதாக அறிமுகமான S.வேணுகோபால் , இரு கால்களும் செயலிழந்த  ஒரு மாற்றுத்திறனாளி தான். கைப்பேசி பழுது நீக்கும் கடையில் பணியை கற்று, தன்னம்பிக்கையுடன் நாமக்கல் மாவட்டத்திலுள்ள நாமகிரிபேட்டை பேருந்து நிலையம் எதிரில் கைப்பேசி பழுது நீக்கும் கடையை தனியாக நடத்தி வருகிறார். #கைப்பேசி பழுது நீக்கும் பயிற்சியை, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக கற்றுத்தர  இருக்கிறார். விருப்பமுள்ளவர்களும், வாழ்த்தவும், கைப்பேசி பழுது நீக்க தொடர்புக் கொள்ள  விரும்புபவர்களும் இக்கைப்பேசியில் எண்ணில் தொடர்புக் கொள்ளவும்:   
தொடர்பு எண்:98425 87269   








11) இப்பெண்ணும்  இவ்விழாவிலே புதிதாக அறிமுகமானவர்.  அறக்கட்டளை நடத்தி வருவதாக அறிந்துக் கொண்டேன். இவரின் அறிமுகம் என் வாழ்வில் எமக்கொரு பாடமாகும், பெயர் நினைவிலிருந்து அகன்று விட்டது.




12) திரு.குமார் விழா நடைபெறுவதற்கு   முதல் வாரத்தில் நான் சென்ற வழியில் இவரை அறிமுகப்படுத்திக் கொண்டேன். இவரும் மீண்டும் எம்மிடம் பேச விரும்பினார். இவ்விழா ஒரு வாய்ப்பாக அமைய அவரையும் அழைத்தேன். வந்தவர், அவருக்கும் பெண் தேவையென கேட்க, மாவட்ட தலைவரை சந்திக்க ஏற்பாடு செய்து தந்தேன் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். 



13) மணமக்களில் ஒரு பகுதி 





14) தருமபுரி மாவட்ட சங்க செயலாளர் 



15) திரு.இரா.மணி அவர்கள்,  அரசு பட்டுப்புழு வளர்ப்பு துறை ஆய்வாளராக பணியாற்றி ஒய்வு பெற்றவர்.



மேலும் சிலருடன் அறிமுகமும் உரையாடும் வாய்ப்பும்  கிடைத்தது. 

#ஆனால் தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்க மாநில பொதுசெயலாளர் திரு. ஆவின் k.கோபிநாத் BE., M.BA., MSW அவர்களை சந்திக்க ஆவலுடன் எதிர்நோக்கி, வராமையால் ஏமார்ந்தேன்  நட்புகளுக்கு அன்பான நன்னாள் வாழ்த்துக்கள்.


 
நட்புகளுக்கு அன்பான நன்னாள் வாழ்த்துக்கள்.

No comments: