அட இதுயென்ன மகிழ்ச்சிக்குறிய செய்தியா ?, இதில் ஆனந்தப்பட என்ன இருக்கிறது ? என நினைப்பது புரிகிறது. சிறிது கீழே வாசித்துப் பாருங்களேன்.
தகவல்நுட்பத் துறையில் பணியாற்றும் இளைஞர்கள் அமெரிக்காவை உதறிவிட்டு இந்தியா திரும்பும் நிலை அதிகரித்து வருகிறது.இந்தியாவில் படித்து முடிக்கும் தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகள் அனைவரும் அமெரிக்காவில் வேலைப்பார்க்க வேண்டும் என்ற கனவு கானும் நிலை மாறிவருகிறது.அமெரிக்காவில் தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் இந்திய இளைஞர்கள் கூட தாயகம் திரும்ப விரும்புவதாக சமிபத்தில், இண்டஸ் என்ற நிறுவனம் எடுத்த சர்வேயில் தெரியவந்துள்ளது. கடந்த சில வருடங்களில்60 ஆயிரம் பேர் இந்தியா திரும்பி விட்டதாக சர்வேயில் தெரியவந்துள்ளது.
காரணங்கள் ;;
1) இந்தியாவில் ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள்,நிதி நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் முதலீடு செய்வதால், இந்தியாவில் அதிக வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்கள் கருதுகிறார்கள்.
2)இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்ந்து வருவதால், அமெரிக்க நிறுவனங்களுக்கு இணையாக சம்பளம் கொடுக்க முன்வருவதும்,
3) முக்கியமாக 27 முதல் 35 வயதுக்குட்பட்ட தம்பதிகள் பலர் இந்தியா திரும்ப விரும்புகிறார்கள். இதிலும் பெரும்பாலோர் தங்கள் குளந்தைகளை மேற்கத்திய நாகரீகத்திலிருந்து காப்பாற்றவும், இந்திய சூழ்நிலையில் படிக்க வைப்பதற்காகவும், இந்தியா திரும்ப விரும்புவதாக கூறியுள்ளதை முக்கியமாக கவணிக்க வேண்டும்.
இது எவ்வளவு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விசயமாக உள்ளது. இங்குள்ளவர்களோ மேல்நாட்டுமோகத்தில், அதே போல் இங்கேயே நடக்க துடிக்க, இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்று இங்கிருந்து சென்ற நம்மவர்களோ, திரும்பி வர முயற்சி செய்து வருகிறார்கள். அதை இங்குள்ளவர்கள் உணர்ந்து நமது கலாச்சாரத்தைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.
Wednesday, September 12, 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
uh... thank you for this style :)
முகம் காட்ட மறந்த அல்லது மறுத்த நண்பரே, நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும். தங்கள் கருத்துக்கள் தொடருமேன்ர நம்பிக்கையில்,
-தவப்புதல்வன்.
Post a Comment